Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்: தயாசிறி ஜயசேகர 

November 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மின்னல் புகழ் ஜே. ஶ்ரீரங்கா கைது

வாகன விபத்தொன்று காரணமாக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்காவுக்கு சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் பிணை பெற்றுக்கொள்ளும் விடயம் இன்னும் தொடர்வதனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிணை கோரிக்கை

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  “சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டம் இந்த சபையில் அனுமதிக்கப்பட்டு, சபாநாயகராகிய நீங்கள் அதில் கைச்சாத்திட்டிருந்திருந்தீர்கள்.

குறித்த சட்டத்தின் பிரகாரம் இதுவரை காலமும் ஒருவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாகி இருந்த நடவடிக்கையை நீதிவான் நீதிமன்றம் ஊடாக பிணை பெற்றுக்கொள்ள முடியுமாகிறது.

அதன் பிரகாரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா பிணை பெற்றுக்கொள்வதற்காக நீதிவான் நீதிமன்ற்ததுக்கு பல தடவைகள் சென்றுள்ளார்.

ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்: தயாசிறி ஜயசேகர கோரிக்கை | Regarding Bail Sriranga Dayasirijayasekara Demands

ஆனால் இந்த பிணையை மேன்முறையீட்டு நீதிமன்றலேயே பெற்றுக்கொள்ள முடியும் என அவருக்கு அங்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சென்றால் நீதிவான் நீதிமன்றத்துக்கு செல்லுமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டத்துக்கு நீங்கள் கைச்சாத்திட்ட பின்னர் நீதி அமைச்சர் அதில் கைச்சாத்திடவில்லை என தெரிவித்து, அவர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

இதேவேளை சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்துக்கு கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். 

ஆனால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்கும் செயற்பாடு அங்குமிங்கும் தள்ளப்பட்டு வருவதால் கடந்த 8 மாதங்களாக அவர் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். இது அவரின் மனித உரிமை மீறலாகும். அதனால் இது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

ஸ்ரீரங்காவுக்கு பிணை வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும்: தயாசிறி ஜயசேகர கோரிக்கை | Regarding Bail Sriranga Dayasirijayasekara Demands

அதனைத் தொடர்ந்து எழுந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகையில், ஸ்ரீரங்கா வாகன விபத்தொன்றுக்காகவே சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

அவருக்கு பிணை வழங்கும் செயற்பாட்டில் இழுபறிநிலை ஏற்பட்டு வருகிறது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் விசேட சட்டத்தரணி ஒருவரை அவரின் விடயத்தில் நியமித்திருக்கிறது.

இது ஒருபோது இடம்பெறாத ஒன்று. ஸ்ரீரங்கா உயர் குருதி அழுத்துக்கு ஆளாகி இருக்கிறார். அதேபோன்று அவரது தாய் வெளிநாட்டில் இருந்து அவரை பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அதனால் அவரது விடயம் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் ”என தெரிவித்துள்ளார்.

Previous Post

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் இளைஞன் உயிரிழப்பு

Next Post

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க வேண்டி ஏற்படும் – சுமந்திரன்

Next Post
இனப்பிரச்சினைக்கான  தீர்வில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே  ஏற்போம் | எம்.ஏ.சுமந்திரன்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணியை நீண்ட காலத்திற்கு முன்னெடுக்க வேண்டி ஏற்படும் - சுமந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures