பெங்களூரில் உள்ள கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமனாம் ஒன்று ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது.
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் SG 1238 தரையிறங்கியது. பின்னர் ஓடுபாதையில் செல்லும் போது ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து சுமார் 40 நிமிடங்கள் ஓடுபாதை செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் விமான நிலையத்திற்கு வரும் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் சென்னைக்கு எட்டு விமானங்களும் , திருச்சி மற்றும் கோவைக்கு தலா ஒரு விமானமும் திருப்பி விடப்பட்டது.
மேலும் இந்த விபத்தால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு சேதம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கிறது.