Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி | ஒருவர் கைது

March 15, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா மோசடி செய்ததாக கூறப்படும் பெண் ஒருவர் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு 05 பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸாருக்கு மூன்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இது தொடர்பான விசாரணைகளுக்காக குறித்த பெண் நேற்றைய தினம் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு எதிராக வெள்ளவத்தை, வாதுவை, மீகஹவத்த, ஹபராதுவை மற்றும் கிரியுல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாரஹேன்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous Post

முல்லைத்தீவில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி ரவைகள் மீட்பு

Next Post

ராபர் | திரைவிமர்சனம்

Next Post
ராபர் | திரைவிமர்சனம்

ராபர் | திரைவிமர்சனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures