சிம்பு உள்ளிட்ட சில முன்னணி நடிகர்கள், தங்கள், ‘கட்-அவுட்’களுக்கு, அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுமாறு ரசிகர்களை கேட்டு வருகின்றனர். ஆனால், யோகிபாபுவோ, தான் முக்கிய வேடத்தில் நடித்த, பட்டிபுலம் என்ற படம், சென்னையிலுள்ள ரோகினி தியேட்டரில் வெளியான போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தன், ‘கட்-அவுட்’களுக்கு சில ரசிகர்கள், பாலாபிஷேகம் செய்ததை தடுத்து நிறுத்தினார்.
அதோடு, ‘இந்த பாலை வீணடிக்காமல், ஏழை குழந்தைகளுக்கு கொடுத்தால், ஒரு நேரம் பசியாவது ஆறுமே…’ என்று அவர்களுக்கு புத்திமதி கூறி, ‘கட்-அவுட்’டுக்கு பாலாபிஷேகம் செய்வதை, தடுத்து நிறுத்தி இருக்கிறார்.