பூவே பூச்சூடவா படம் மூலம், 1985ல், தமிழுக்கு வந்தவர், நதியா. குறுகிய காலத்தில் சினிமாவில் பிரபலமானார். அதையடுத்து, அவரது பெயரில் வளையல், புடவை, செருப்பு என, பல பொருட்கள், விற்பனைக்கு வந்தன. திருமணத்திற்கு பின், ஜெயம்ரவியுடன் நடித்த, எம்.குமரன் சன்ஆப் மகாலட்சுமி படத்தில், ‘ரீ-என்ட்ரி’ கொடுத்த, நதியா, குணசித்திர நடிகையாக வலம் வருவதோடு, தற்போது, ரோஜா என்ற, தொடர் மூலம் சின்னத்திரையிலும் நடிக்கிறார். நதியாவின் புகழை கருத்தில் வைத்து, இந்த தொடரில் நடிக்க, சினிமா கதாநாயகி அளவுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். காத்து கிடப்பதை விட, இரண்டு சால் கஞ்சி குடிக்கலாம்!