ராஜகிரிய வெலிக்கடை பிரதேசத்தில் தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்படடுள்ளது.
இந்த நிலையம் நேற்றைய தினம் முற்றுகையிடப்பட்டுள்ளாதக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முற்றுகையிடப்பட்ட குறித்த விடுதியிலிருந்து தணமல்வில, வெல்லம்பிட்டி, கரந்தெனிய மற்றும் காலி பிரதேசங்களை சேர்ந்த 25 முதல் 47 வயதிற்கிடைப்பட்ட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த விபசார விடுதிக்கு முகாமையாளராக செயற்பட்ட 43 வயதுடைய அநுராத புரத்தை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.