Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

October 6, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய முன்னாள் தலைவர் மற்றும் செயலாளரை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவு பொலிசார் (ரிஐடி) அழைத்துள்ளார்கள்.

வவுனியா, நெடுங்கேணி பொலிசார் ஊடாக குறித்த அழைப்பாணை கடிதங்கள் திங்கட்கிழமை (06.10) வழங்கப்பட்டன.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் அவர்களும் செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைக்காக எதிர்வரும் எதிர்வரும் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.

வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே குறித்த இருவரையும் வருகை தருமாறு அழைப்பாணை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், தற்போது ஆலயத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஈழத்தமிழருக்கு சர்வதேசம் ஒருபோதும் உதவாது! அர்ச்சுனா பகிரங்கம்

Next Post

ஜனாதிபதி மஹிந்தவை விசாரணை செய்யுங்கள் – சரத்பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு

Next Post
அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

ஜனாதிபதி மஹிந்தவை விசாரணை செய்யுங்கள் - சரத்பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures