காலியில் யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கம்பல கொட்டவகம நிதஹஸ் மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் சாடிகளில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் யக்கலமுல்ல பொலிஸாரால் கடந்த செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யக்கலமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலமுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை காலி மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.