Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விஸ்வரூபமான ஜல்லிக்கட்டு போராட்டம்: அவசரச் சட்டம் கொண்டு வருகிறார் ஒ.பி.எஸ்?

January 20, 2017
in News
0
விஸ்வரூபமான ஜல்லிக்கட்டு போராட்டம்: அவசரச் சட்டம் கொண்டு வருகிறார் ஒ.பி.எஸ்?

விஸ்வரூபமான ஜல்லிக்கட்டு போராட்டம்: அவசரச் சட்டம் கொண்டு வருகிறார் ஒ.பி.எஸ்?

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவருவதற்கு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட இப்போராட்டம், தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இதன் காரணமாகவே தமிழக முதல்வரான பன்னீர்செல்வம் நேற்று மத்திய அரசை சந்தித்து ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக அவசரச்சட்டம் கொண்டு வருவது குறித்து எடுத்து கூறியதாக தகவல்கள் வெளியாகின.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய பிறகு, உடனடியாக தமிழகம் திரும்பும் முடிவில் இருந்தாராம் முதல்வர், பின்னர் கட்சி எம்.பி-களிடம் தனியாக பேசும்போது, பிரதமரிடமிருந்து ஒரு பாசிடிவ் சிக்னல் கிடைத்துள்ளது. அதை தெரிந்துகொண்ட பிறகு தான் சென்னை கிளம்பலாம் என்று நினைக்கிறேன் என்று சொன்னாராம்.

இதன் காரணமாக முதல்வர் சென்னை திரும்புவது தாமதமாகியுள்ளது. அ.தி.மு.க எம்.பி-களை கிளம்பச் சொல்லிவிட்டு, முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல்வருடன் டெல்லியில் முகாமிட்டிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சற்று கெடுபிடியாக இருக்கிறது. அதையே சுட்டிக்காட்டி மத்திய அரசும் கைவிரித்துவிட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு தரப்பிலிருந்து ஏதாவது அவசர நடவடிக்கை எடுப்பதுதான் ஒரே தீர்வு என்று சட்ட நிபுணர்கள் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அப்போதுதான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். ஆதரவு போராட்டங்கள் ஓயும். இதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் டெல்லியில் இருந்தபடியே, சென்னை தலைமைச் செயலக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சில உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதற்கான சில நடவடிக்கைகளை டெல்லியில் இருந்தபடியே செய்துமுடிக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,சட்டசபையை கூட்டி அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் சிறப்பு தீர்மானம் கொண்டு வரலாமா என்று யோசித்ததாகவும், இந்த கருத்தை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் ஊடகங்களிடம் ஏற்கெனவே கூறிவிட்டதால், அவர் சொல்லி இதை அரசு செய்ததாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்த யோசனையை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்து, அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றலாமா என்று ஆலோசனை நடந்ததாகவும், அதுவும் வேண்டாம் என்று பிறகு கைவிடப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழகத்தில் நடத்தலாம் என்று தமிழக அரசு தரப்பில் அவசரச் சட்டம் கொண்டுவருவது பற்றி ஆலோசனை தற்போது நடந்து வருகிறது என்றும் அவசர சட்டத்திற்கு முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டாலே போதும். அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்புவது சம்பிரதாயம் தான் எனவும் அந்த சம்பிரதாயத்திற்காகத்தான், முதல்வர் டெல்லியில் தங்கியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Featured
Previous Post

ஜல்லிக்கட்டுக்கு வழி பிறக்கவில்லை என்றால் முதலமைச்சரை முற்றுகையிடுவோம்- பிரபல இயக்குனர்

Next Post

பெரும்பாலான விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்கின்றது – சீ.வி. விக்னேஸ்வரன்

Next Post
பெரும்பாலான விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்கின்றது – சீ.வி. விக்னேஸ்வரன்

பெரும்பாலான விடயங்கள் எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்கின்றது - சீ.வி. விக்னேஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026

Recent News

பிளாக்மெயில் – திரைப்பட விமர்சனம்

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘இம்மோற்றல்’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

July 28, 2026
சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

சாமிக்க கருணாரட்ன துடுப்பாட்டத்தில் அசத்துகிறார் ; துஷ்மன்த சமீரவின் 5 விக்கெட் குவியல் வீண் போனது

July 28, 2026
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் தெரிவு!

July 28, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

செம்மணி மனித புதைகுழி பின்னணியில் உள்ள குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதி – நீதி அமைச்சர் 

July 28, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures