கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய ராதாரவி, நயன்தாரா குறித்து பேசியது பெரிய சர்ச்சையானது. அதையடுத்து அவரை திமுக அடிப்படை உறுப்பினர் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.
திரையுலகினர் பலரும் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்தனர். தனது பெயருக்கு முன்பு ராதா என்ற பெண் பெயரை வைத்துக்கொண்டு இப்படி பெண்களை அருவருக்கத்தக்க வகையில் ராதாரவி பேசுவது நியாயமில்லை. அதனால அவர் ராதா என்பதை தனது பெயரில் இருந்தே நீக்கி விடலாம் என்று கருத்து வெளியிட்டிருந்தார் நடிகர் விஷால்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் ராதாரவியிடம் விஷாலின் இந்த கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ராதா என்பது எனது தந்தையின் பெயர். அதைத்தான் எனது பெயருக்கு முன்பு வைத்துள்ளேன். இதெல்லாம் விஷாலுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு ஆர்.கே.நகரில் போட்டியிடவே தெரியாதபோது இதெல்லாம் எப்படி தெரிந்திருக்கும் என்று விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராதாரவி.

