Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விவாக சட்டம்: மாற்றம் செய்ய இலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம்

July 17, 2019
in News, Politics, World
0

இலங்கையில் முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளதோடு, குறித்த திருத்தங்களுக்கான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளனர்.

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் ஒன்று கூடி, இந்த விடயத்தில் இணக்கம் கண்டதோடு, பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாக, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைசர் முஸ்தபா பிபிசி யிடம் கூறினார்.

இதற்கிணங்க முஸ்லிம் விவாக மற்றும் விவாக ரத்துச் சட்டத்தில், ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயதை 18 ஆக அதிகரித்தல், திருமண பதிவுப் பத்திரத்தில் மணமகளின் கையைழுத்தை கட்டாயமாக்குதல் மற்றும், எதிர்காலத்தில் பெண் காஸி நீதவான்களை நியமிக்கும் போது, உயர் கல்வித் தகைமையை கொண்டவர்களை அந்தப் பதவிக்காக நியமித்தல் ஆகிய விடயங்களை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா கூறினார்.

இலங்கையில் இதுவரையில் காஸி நீதவான்களாக பெண்கள் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1951ம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில், பெண்ணுக்கான திருமண வயது 12 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை 18 வயதாக திருத்துவதற்கு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

இஸ்லாமிய விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் திருமண வயது உள்ளிட்ட சில விடயங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது.

இலங்கையில் பொதுச் சட்டத்துக்கு அப்பால் கண்டியச் சட்டம், தேச வழமைச் சட்டம் மற்றும் முஸ்லிம் தனியார் சட்டம் ஆகியவையும் அமலில் உள்ளன. இவற்றில் முஸ்லிம் தனியார் சட்டத்தினுள் முஸ்லிம்களின் விவாகம் மற்றும் விவாக ரத்துச் சட்டம் அடங்கியுள்ளது.

இந்த நிலையில் “இலங்கையின் பொதுச் சட்டத்தில் 1995ம் ஆண்டு 18ம் இலக்க திருத்தத்தின் மூலம்தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்ற எல்லை நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு முன்னர் 1907ம் ஆண்டில் 17ம் இலக்க திருமண மற்றும் விவாகரத்து கட்டளைச் சட்டதின் 15ம் ஷரத்தில், ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1951 ஆம் ஆண்டு முஸ்லிம் திருமண சட்டமும் அதே வயதெல்லையை மாற்றாமல் கொண்டுள்ளது” என்று சூறா கவுன்சில் செயலாளரும் இஸ்லாமிய அறிஞருமான இனாமுல்லா மஸிஹுத்தீன் குறிப்பிடுகின்றார்.

“உடல் ரீதியாக பெண் முதிர்வடைதல் (பூப்படைதல்) என்பதும், சுயமாக முடிவுகளை மேற்கொள்ளும் வகையில் மன முதிர்வடைதல் என்பதும் வெவ்வேறான விடயங்களாகும். அதேவேளை மனம் முதிர்ச்சியடையும் வயது எது என்பதிலும் கேள்விகள் உள்ளன. எவ்வாறாயினும் இலங்கையில் 18 வயதை அடைந்தவுடன் ஒருவர் சுயமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று சட்டம் கூறுகின்றது. அந்த வகையில் அதையே நாம் மன முதிர்ச்சி வயதாக எடுத்துக் கொள்ளலாம். எனவேதான், இஸ்லாமிய விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் பெண்ணின் திருமண வயதாக 18 ஐ நிர்ணயிக்கலாம் என்று நான் கூறுகின்றேன்” என்று இனாமுல்லா விவரித்தார்.

அதேவேளை, பெண்ணொருவர் தனது திருமணம் தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, சட்ட ரீதியான நிவாரணங்களை சுயமாக பெற்றுக் கொள்வதென்றால், அவர் 18 வயதை அடைந்திருத்தல் வேண்டும் என்பதையும், இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று, இவ்வாறான விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, உலமா சபையிடமும், இஸ்லாமிய அறிஞர்களிடமும் முன்னதாக கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையில், முஸ்லிம்களுக்கென தனியார் சட்டம் இருப்பதற்கு எதிராகவும், அதனை இல்லாதொழிக்க வேண்டும் எனக் கூறியும், பௌத்த பிக்குகளும், சிங்கள அமைப்புக்களும் சில காலமாக ஆர்ப்பாட்டங்களையும், கவன ஈர்ப்பு போராட்டங்களையும் நடத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

தலை ஒட்டிப் பிறந்த குழந்தைகள் : அறுவை சிகிச்சை வெற்றி

Next Post

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Next Post

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026

Recent News

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட லியோ சிவகுமாரின் ‘டெலிவரி பாய்’ படத்தின் டீசர்

July 5, 2026
திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

திருமங்களாய் சிவன் கோவில் தொல்லியல் தளத்தில் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கள ஆய்வு!

July 5, 2026
நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures