உந்துருளி விபத்தில் இளைஞர்கள் உ இருவர் யிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – மாத்தறை வீதியில் கபுருகமுவ கங்கை அருகாமையில் நேற்றுமுன்தினம் அதிகாலை 1.35அளவில் இது இடம்பெற்றது.
மாத்தறை நோக்கி உந்துருளியில் பயணித்தவர்களே வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் உள்ள கம்பம் ஒன்றுடன் மோதுண்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் படுகாயமடைந்த நிலையில் மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்துள்ளனர்.
கொடபொல பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

