புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவின் பிணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியாழ் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்தும் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டு வருவதால் அவருக்கு பிணை வழங்கக்கூடாது என அரச தரப்பு சட்டத்தரணி நிஷான் நாகரட்ணம் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை அதிகாரி நிஷாந்த சில்வா ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதவான் சந்தேகநபரை அடுத்த மாதம் 4 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்