செல்ஃபி’, இன்றைய நவீன உலகத்தில் தவிர்க்க முடியாத ஒர் அனிச்சை செயலாக உள்ளது. கல்யாணம் முதல் கருமாதி வரை ‘செல்ஃபி’ எடுக்காதோர் இல்லை. இது ஒரு சம்பிரதாயமாக மாறி உள்ளது. தனிமை,சோகம்,சிரிப்பு, மகிழ்ச்சி, நட்பு, கொண்டாட்டம், காமம் என அனைத்து தருணங்களையும் கைபேசிக்குள் சேமிக்கும் செல்ஃபிக்களால் சமீப காலமாக விபரீதங்களும் நிகழ்கின்றன. இதன் தாக்கம் உலகம் முழுதும் இருக்கிறது. இதனை பின்னுக்குத் தள்ள ‘போத்தி’ (Bothi) எனும் புகைப்படம் எடுக்கும் அம்சத்தை நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
செல்ஃபி வசதி, நடைமுறையில் உள்ள அனைத்து கைபேசிகளிலும் உள்ளது. கைபேசியின் விலைக்கு ஏற்ப, அதில் முன்பக்க கேமராவும் எடுக்கும் புகைப்படத்தின் தெளிவும் இருக்கும். ‘செல்ஃபி’ என்ற புகைப்பட முறை, மத்திய லண்டனின் கல்லூரி ஒன்றில் அதற்கென ஒரு படிப்பே இருக்கும் அளவுக்குப் பரவியுள்ளது.
வித்தியாசமான செல்ஃபிக்கள்