Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விடுதலைப் புலிகளின் தலைவர் அன்றே கூறிய விடயம்! ஆனால் கைகட்டி வேடிக்கை பார்க்கவும் மாட்டோம் – கொந்தளிக்கும் சிறீதரன்

August 15, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கஜேந்திரகுமாருக்கு நேர்ந்த கதியே நாளை ஒட்டுமொத்த தமிழ் தலைமைகளுக்கும் நேரிடும் | சிறிதரன்

பௌத்த விகாரைகளை தமிழர்கள் பிடுங்கிக் கொள்ளப்போவதாகவும் அதை தான் காப்பாற்றப்போவதாகவும் சிங்கள மக்களுக்கு காட்டி பெரிய அரசியலொன்றை செய்யலாம் என மேர்வின் சில்வா கருதுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது பலிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் வடக்கு, கிழக்கிற்கு செல்வதாகவும், அங்கே விகாரைகள் மற்றும் பிக்குகள் மீது கை வைக்க முயன்றால் அங்குள்ளவர்களின் தலைகளுடனேயே களனிக்கு திரும்புவதாகவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திச்சேவை சிறீதரனை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்

மேலும் கூறுகையில், 1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொடுத்த செவ்வியொன்றில் கூட “நாங்கள் ஆயுதங்களை விரும்பி தூக்கவில்லை. எங்களுடைய மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் எங்கள் கைகளில் திணிக்கப்பட்டது” என்று கூறினார்.

ஆகவே மீண்டும் ஆயுதங்களை எங்களுடைய கைகளில் திணிக்க வேண்டுமென மேர்வின் சில்வா போல, சரத் வீரசேர போல, விமல் வீரவன்ச போல ஆட்கள் நினைக்கின்றார்கள் என்றால் அப்படியொரு சந்தர்ப்பத்தை நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்.

அவர்கள் தலையை கொய்தால் நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று மேர்வின் சில்வா கருதுவது இந்த நவீன உலகத்திற்கு பொருந்துமா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

FIBA மகளிர் ஆசிய கிண்ண கூடைப்பந்தாட்டத்தில் இலங்கைக்கு 2ஆவது தோல்வி

Next Post

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: நீதிமன்றம் அனுமதி

Next Post
குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: நீதிமன்றம் அனுமதி

குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா: நீதிமன்றம் அனுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures