எல்.ரி.ரி.ஈ. அமைப்பை மீண்டும் உருவாக்க வேண்டும் என கருத்துத் தெரிவித்திருந்த யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஷ்வரன் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாகவும் திட்டமிட்ட குற்றச் செயல்களுக்கான விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அறிக்கை இன்று அல்லது நாளை சட்ட மா அதிபருக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபரின் விசேட கண்காணிப்பின் கீழ் பொலிஸ் குழுவொன்று யாழ்ப்பாணம் சென்று விசாரணை நடாத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு இராஜாங்க அமைச்சர் விஜயகலா உட்பட 20 பேரிடம் வாக்கு மூலத்தைப் பதிவு செய்து இந்த அறிக்கையை தயார்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.