சொலிசிட்டர் ஜெனரல் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சட்ட மாஅதிபர் இச்சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக சட்ட மாஅதிபரின் இணைப்பு அதிகாரியான நிஷாரா ஜயரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியுடன் இரகசியமாக முன்னெடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பிலேயே விசாரணைகளை ஆரம்பிக்குமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.