Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வானிலை விபரம் | மழை தொடரும்….

September 2, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் அடுத்த சில நாட்களில் பல மாகாணங்களில் மழை பெய்யும்

மத்திய, சப்ரகமுவ, மேல்,தென்  மற்றும் வடமேல்  மாகாணங்களில்   அடிக்கடி  மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும்  முல்லைத்தீவு  மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.  

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மத்திய மலைப்பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும் அத்துடன் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 – 45 கிலோ மீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக  இன்று மதியம் சுமார் 12.11 மணியளவில் நவக்காடு, கல்கமுவ மற்றும் ஓனேகம போன்ற இடங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கின்றது. 

புத்தளம் தொடக்கம் கொழும்பு,  காலி, மாத்தறை  ஊடாக  அம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும். 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் தென் மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். 

புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான அத்துடன் பொத்துவில் தொடக்கம்  ஹம்பாந்தோட்டை  வரையான கடல்  பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 – 60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக  காலி  வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  50 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில்  இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்களில்  ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். 

Previous Post

யாழ்ப்பாணத் தமிழர் தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதி ஆனார்

Next Post

பல்பரிமாணத் தாக்கங்களால் பெரிதும் நலிவுற்ற நிலையில் 12.34 மில்லியன் மக்கள் 

Next Post
இலங்கை உட்பட 6 நாடுகள் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் மீளாய்வு கூட்டத் தொடர் நாளை ஆரம்பம்

பல்பரிமாணத் தாக்கங்களால் பெரிதும் நலிவுற்ற நிலையில் 12.34 மில்லியன் மக்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures