Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாதுவையில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் 30 வயதான காதலனும் கைது!

March 4, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சட்ட விரோத கிருமி நாசினிகளுடன் ஒருவர் கைது

வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த  17 வயது சிறுமி மற்றும் 30 வயது இளைஞராவர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம்  ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரான சிறுமி ஹொரணை பிரதேசத்தில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் தனது காதலனான 30 வயது இளைஞருக்காக போதைப்பொருளை பாதுகாப்பாக தன்வசம் வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களா என  பரிசோதிப்பதற்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

உதவி ஆசிரியர்கள் நியமனத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி கண்டியில் போராட்டம்

Next Post

மட்டக்களப்பில் கோர விபத்தில் இளைஞர் பலி

Next Post
மட்டக்களப்பில் கோர விபத்தில் இளைஞர் பலி

மட்டக்களப்பில் கோர விபத்தில் இளைஞர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures