இன்று சாதாரண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துவது என்பது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ஆனால் நடிகர் மோகன்லால் தனது வாட்ஸ்அப் கணக்கை அழித்துவிட்டு அதிலிருந்து வெளியேறி உள்ளது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மோகன்லால் கூறும்போது, நீண்ட நாட்களாகவே சில எதிர்மறை எண்ணங்கள் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலமாக பரவி வருவது என்னை கவலைப்பட வைக்கிறது. இப்போது வாட்ஸ்அப்பை எனது மொபைலில் இருந்து தூக்கி எறிந்ததன் மூலம் ரொம்பவே சுதந்திரமாகவே உணர்கிறேன்.
நாம் நேசிக்கும் ஒவ்வொருவருடனும் அன்பை பரிமாறிக்கொள்ள இன்னும் பல வழிகள் இருக்கின்றன இப்போதுதான் எனக்கு அதிகப்படியான நேரமும் அதன்மூலம் இன்னும் அதிகம் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என கூறியுள்ளார் மோகன்லால். மேலும் ஒருவரது சொந்த எண்ணங்களையும் கருத்துக்களையும் அடுத்தவர் மீது தயவுசெய்து திணிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்