கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைக்கு ஆளான சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகைகளுக்கும் சினிமாவில் மற்ற துறைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கும் சம மதிப்பும் பாதுகாப்பும் தேவை என்பதை வலியுறுத்தி சினிமா பெண்கள் நல அமைப்பு ஒன்று துவங்கப்பட்டது.
இந்த அமைப்பில் நடிகைகள் ரீமா கல்லிங்கல், பார்வதி, ரம்யா நம்பீசன், பத்மபிரியா, ரேவதி உள்ளிட்ட ஜூனியர் சீனியர் நடிகைகள் தீவிரமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளான ஐஸ்வர்ய லட்சுமி, அனு சித்தாரா உள்ளிட்ட சிலர் இந்த அமைப்பில் இல்லை.
தற்போது நடிகை லட்சுமிமேனன் இந்த அமைப்பு பற்றி கூறும்போது, இது முட்டாள்தனமான ஒன்று எனக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். மேலும் இப்படி தன் கருத்துக்களைக் கூறுவதற்கு தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்