Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியா நகரசபை அசமந்தமாக செயற்படுவதாக வன இலகா திணைக்களம் முறைப்பாடு

December 19, 2018
in News, Politics, World
0
வவுனியா நகரசபை தமது கட்டுப்பாட்டிலுள்ள வேலியை அமைத்துத்தருமாறு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலம் கோரப்பட்ட கடிதத்திற்கு இன்று வரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தொலைபேசியிலும் பல தடவைகள் தொடர்புகொண்டு முறையிட்டபோதும் எவ்விதமான நடவடிக்கையும் இடம்பெறவில்லை. நகரசபைக்குரிய பகுதியை வேலியை அடைத்துத்தருமாறு வன இலகா திணைக்களத்தின் உத்தியோகத்தர் கோரியுள்ளனர்.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவருகையில்,
வவுனியா மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகிலுள்ள நகரசபைக்குச் சொந்தமான பொது மலசலகூடம் அமைந்துள்ள பகுதியின் அருகே வன இலகாவினரின் திணைக்களம் அமைந்துள்ளது. இதற்கு நகரசபையினரின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள வேலி நீண்டகாலமாக அமைக்கப்படவில்லை. இதனால் கால்நடைகள் கட்டாக்காலி மாடுகள் அதனைக்கடந்து வன இலகா திணைக்களத்தின் அலுவலகத்திநற்குள் சென்று அங்குள்ள அவர்களின் பயிர்களையும் ,செடிகளையும் நாசம் செய்து வருகின்றது.
இதனால் தமது அலுவலகத்திற்குள் வைக்கப்பட்டுள்ள செடிகள், மரங்களை கால்நடைகள் துவசம் செய்து வருகின்றன. அத்துடன் வன இலகாதிணைக்களத்தினால் கைப்பற்றப்படும் சட்டவிரோத மரங்களையும் இனந்தெரியாதவர்கள் தூக்கிச் செல்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகரசபையினருக்குரிய பகுதி வேலியை அடைத்துத்தருமாறு கடந்த மூன்று மாதங்களாக எழுத்து மூலமாக கோரி வருகின்றோம் இன்று வரையில் அது சீரமைத்துத்தரப்படவில்லை.
நகரசபைத்தலைவரிடம் நேரடியாக இது தொடர்பில் முறையிட்டபோதும் பலன் கிடைக்கவில்லை இதனை சீரமைத்து எமது அலுவலக்திலுள்ள மரம் செடிகளைப்பாதுகாப்பதற்கும் எமது அலுவலகத்திலுள்ள பொருட்கள் திருடப்படாமல் இருக்கவும் உடனடியாக நகரசபையினர் தமது வேலியை அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளனர்.
வவுனியா நகரசபைக்குச் சென்ற வன இலகா திணைக்கள உத்தியோகத்தர் தமது முறைப்பாட்டினை திரும்பவும் மேற்கொள்ளப்பட்டபோது நகரசபையிலுள்ள இதற்குப் பொறுப்பாகவுள்ள தொழிநுட்ப உத்தியோகத்தர் நகரசபையில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்றது. அனைத்துத் தொழிலாளர்களும் தத்தமது பணிகளுக்குச் சென்றுவிட்டனர். இம் மாதத்திற்குள் தமது வேலியை அடைப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் பொறுப்பற்ற விதத்தில் கூறுவதாக  தெரிவித்துள்ளார்.
எனினும் குறித்த வன இலகா திணைக்கள உத்தியோகத்தர் இவ்வாறே அடிக்கடி நகரசபையினால் சொல்லப்பட்டு தமது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
Previous Post

திருகோணமலையில் தொல்லியல் திணைக்களத்தின் அடாவடி

Next Post

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்ணின் மரணம்!

Next Post

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய வெளிநாட்டு பெண்ணின் மரணம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures