Wednesday, September 3, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றம் | வியாபாரிகள் – மாநகரசபை ஊழியர்களிடையே முறுகல்

July 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வவுனியாவில் வீதியோரக் கடைகள் அகற்றம் | வியாபாரிகள் – மாநகரசபை ஊழியர்களிடையே முறுகல்

வவுனியாவில் நடைபாதை கடைகளை அகற்றும் நடவடிக்கையின்போது, வியாபாரிகள் மற்றும் மாநகர சபை ஊழியர்கள் இடையே கடுமையான முரண்பாடுகள் ஏற்பட்டன.

இலுப்பையடி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதிகளில் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்துவந்த நடைபாதை வியாபாரிகளை அகற்றும் செயற்பாடு இன்று திங்கட்கிழமை (14) வவுனியா மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.

மாநகர முதல்வர் சு.காண்டீபன் இதுகுறித்து தெரிவிக்கையில், போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு இடையூறாக இந்தக் கடைகள் இருந்ததால், அவற்றை அகற்றும் முடிவை மாநகர சபை எடுத்ததாக கூறினார்.

இதற்கு முந்தையதான கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடைகளை அகற்றத் தொடங்கினர். இதனால் வியாபாரிகள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே முரண்பாடுகள் மற்றும் தள்ளுமுள்ளு நிலைகள் உருவாயின.

வியாபாரிகள் தமக்கான மேலும் கால அவகாசம் வழங்கப்படவேண்டும் என கோரிக்கையொன்றை முன்வைத்தனர். ஆனால் மாநகர முதல்வர், ஏற்கனவே ஏப்ரல் மாதத்தோடு கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று அறிவித்திருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், இனி கால அவகாசம் வழங்க முடியாது என உறுதியுடன் தெரிவித்தார்.

இதேநேரம், வன்முறைத் திருப்பங்களை தவிர்க்க, பொலிஸாரும் தலையிட்டு வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, வியாபாரிகள் உடன்பாட்டுக்கு வந்து, வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகளை அகற்றினர்.

Previous Post

பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

Next Post

யாழில் வெள்ளை ஈ தாக்கத்தால் ஒன்றரை இலட்சம் தென்னை மரங்கள் பாதிப்பு

Next Post
யாழில் வெள்ளை ஈ தாக்கத்தால் ஒன்றரை இலட்சம் தென்னை மரங்கள் பாதிப்பு

யாழில் வெள்ளை ஈ தாக்கத்தால் ஒன்றரை இலட்சம் தென்னை மரங்கள் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures