பொருட்களை கையாளுவதற்கான புதிய முறைமையான New Terminal Handling System முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் Nishantha Gamage கருத்து தெரிவிக்கையில், இந்த துறைமுகத்தின் பரந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை சிங்கப்பூரில் உள்ள சர்வதேச துறைமுக தொழிற்துறையுடன் தொடர்புடைய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான துறைமுக பராமரிப்பு மற்றும் வசதிகள் தொடர்பான மாநாட்டில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த மாநாட்டில் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் பயன்படுத்தப்படும் வர்த்தகத்திற்கான புதிய முன்னேற்ற நடைமுறைகள் மூலம் துறைமுக வர்த்த செயற்பாடுகள் இரண்டு மடங்காக அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம் மாநாட்டில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக Nishantha Gamage தெரிவித்துள்ளார். அது மட்டுமன்றி சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயங்கள் தொடர்பில் புதிய வர்த்தக முயற்சியில் ஈடுபடுவோர் கூடிய கவனம்செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
RORO (roll-on, roll-off) என்ற நிறுவனத்துடன் பங்குடமை தொடர்பான உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் புதிய உபகணங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன் எத்தகைய சரக்குகளையும் கையாளக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தை போன்று ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகமும் தனது நடவடிக்கைகளை வர்த்தக ரீதியில் விரிவுபடுத்தியுள்ளது என்றும் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் Nishantha Gamage மேலும் தெரிவித்தார்.