வர்தா புயலின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் 4,500 குடும்பங்கள் பாதிப்பு
வர்தா புயல் தாக்கத்தினால் 4,500 க்கும் அதிகமான குடும்பங்கள் முல்லைத்தீவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு நாட்களாக முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாத நிலையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வர்தா புயல் இன்று மாலையில் தமிழகம் சென்னையை ஊடறுத்து செல்லும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், இன்று பிற்பகல் வர்தா புயல் சென்னையை தாக்கியதாகவும் 2 பேர் பலியாகி உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.