நிதி அமைச்சினால் சில வரி சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய வாகனங்களுக்கான சொகுசு வரி அறவீட்டின் போது, இயந்திர கொள்ளவிற்கு பதிலாக வாகன வகைகளின் அடிப்படையில் வரி அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு அட்டைகளை பயன்படுத்தி அந்நிய செலாவணி ஊடாக முன்னெடுக்கப்படும் கொடுக்கல் வாங்கல்களின் போது 3.5 வீத வரி அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான கார்பன் வரியை 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கையடக்கத் தொலைபேசிகளின் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
25 மில்லியன் ரூபாயிற்கும் குறைந்த தொகையில் குத்தகைக்கு வழங்கப்படும் வீடுகளுக்கான பெறுமதிசேர் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
சிகரெட்களுக்கு வழங்கப்பட்டிருந்த தேச நிர்மாண வரிச்சலுகை நீக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான 14 நாட்களுக்குரிய இணை கொடுப்பனவை 20 நாட்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அலுவலக பணியாளர்களின் சீருடைக்கான வருடாந்த கொடுப்பனவு 1000 ரூபாயாலும், மூக்கு கண்ணாடிக்கான கொடுப்பனவு 3000 ரூபாயாலும், பாதணிகளுக்கான கொடுப்பனவு 4000 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.