பொதுவாக நம் திரையுலகம் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், மிக உயரிய விருதுகள் கிடைத்தாலும் நம்மவர்களை வெளிநாட்டினர் பாராட்டும்போது, அவர்களுக்கான அங்கீகாரம் தரும்போது கிடைக்கும் சந்தோஷமே தனிதான். அப்படி ஒரு கௌரவத்திற்கு ஆளாகியிருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். ஆம்.. லண்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் தீபிகா படுகோனின் மெழுகு சிலை இடம்பெற்றுள்ளது.
இந்த சிலையை தீபிகா படுகோனே தன் கையால் திறந்து வைத்துள்ளார். அச்சு அசலாக தன்னைப் போலவே இருந்த மெழுகு சிலையைப் பார்த்து தீபிகா மட்டுமல்ல அவருடன் வந்த கணவர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகாவின் பெற்றோர் அனைவருமே ஆச்சர்யத்தில் வாய் பிளந்தனர்.
இதில் ரன்வீர் சிங் ஒருபடி மேலே போய், இந்த சிலையை நான் வீட்டிற்கு கொண்டு செல்லலாமா என்று கேட்டாராம்.. அதற்கு தீபிகா எப்பொழுதெல்லாம் இங்கே படப்பிடிப்பிற்கு வருகிறீர்களோ அப்போது என்னை நீங்கள் மிஸ் செய்வதாக நினைத்தால், இங்கே வந்து இந்த சிலையை பார்த்துக் கொள்ளுங்கள் ஜாலியாக கூறினாராம்.