நடிகர் மகேஷ்பாபு தனது மனைவியுடன் இணைந்து நிறைய சமூக சேவைகளில் ஈடுபட்டு வருபவர். அதோடு, கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை களுக்கு டிரஸ்ட் மூலம் மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.
இந்த நிலையில், புற்று நோயினால் பாதிக்கப்பட்ட பர்வின் என்ற சிறுமி தன்னை பார்க்க விரும்பியதால் அவரை மகரிஷி படப்பிடிப்பு தளத்திற்கு வரவைத்து அவருடன் அன்பாக பேசி நேரத்தை செலவு செய்திருக்கிறார் மகேஷ்பாபு. ஆந்திராவைச்சேர்ந்த ஸ்ரீகாகுளம் பகுதியைச்சேர்ந்தரான சிறுமி பர்வின், தனது விருப்ப நடிகரான மகேஷ்பாபுவை சந்தித்ததால் பெரிய மகிழ்ச்சியுடன் விடைபெற்று சென்றிருக்கிறார்.