கடந்த மாதம் மலையாள நடிகை காயத்ரி அருண் என்பவரின் இணைய பக்கத்தில், ஒரு இரவுக்கு 2 லட்சம் தருவதாக ஒரு வாலிபர் பதிவிட்டிருந்தார். அதையடுத்து, உங்கள் தாய்-சகோதரி பாதுகாப்பாக இருக்க நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று அவருக்கு பதில் கொடுத்தார்.
இந்நிலையில், 2017ல் வினய் நடிப்பில் சரண் இயக்கிய ஆயிரத்தில் இருவர் படத்தில் சாமுத்ரிகா என்ற பெயரில் நாயகியாக நடித்த தெலுங்கு நடிகை சாக்ஷி சவுத்ரிக்கும், தற்போது ஒருவர் அதுபோன்று ஆபாச பதிவிட்டு, அழைப்பு விடுத்துள்ளாராம்.
அதாவது, சாக்ஷி சவுத்ரி, தனது கவர்ச்சியான வீடியோ மற்றும் போட்டோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதைப்பார்த்த ஒருவர், ஒரு இரவுக்கு ரூ. 1 கோடி தருவதாக சாக்ஷி சவுத்ரிக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சாக்ஷி சவுத்ரி, இந்த மாதிரி கேட்பவர்கள் முட்டாள்கள். நான் விற்பனைக்கு உரியவள் அல்ல என்று அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.