சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இன்று(பிப்.,1) வெளியாகியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பு, யாரும் கட்-அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய வேண்டாம். அந்த பணத்தில் பெற்றோருக்கு உடை, தம்பி, தங்கைக்கு சாக்லேட் வாங்கிக் கொடுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார் சிம்பு.
ஆனால் அதையடுத்து இவருக்கு ரசிகர்கள் யார் இருக்கிறார்கள். எதற்காக இப்படியெல்லாம் பில்டப் கொடுக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் கொடுத்ததை அடுத்து டென்சனாகிவிட்டார் சிம்பு.
அதனால் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும்போது பாலாபிஷேகம், பாக்கெட் பால் வேண்டாம். அண்டா அண்டாவாக ஊற்றுங்கள் என்று அடுத்த வீடியோவை வெளியிட்டிருந்தார் சிம்பு.
அதையடுத்து எதிர்ப்புகள், புகார்கள் எழுந்ததை அடுத்து நான், அண்டாவில் கட்-அவுட்டுக்கு பால் ஊற்றச்சொல்லவில்லை. அண்டாவில் பாலை காய்ச்சி படம் பார்க்க வருபவர்களுக்குத்தான் கொடுக்க சொன்னேன் என்று அப்படியே மாற்றிப்பேசினார் சிம்பு.
இப்படியான நிலையில், வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி தியேட்டரில் அதிகாலை 5 மணி காட்சியை ரசிகர்களுடன் அமர்ந்து கண்டுகளித்துள்ளார் சிம்பு.
அதோடு பல பகுதிகளில் சிம்புவின் ரசிகர்கள் பாக்கெட் பால், அண்டாவில் பால் என்றும் பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள். அந்த வீடியோக்களும் இணைய தளங்களில் வைரலாகியுள்ளன.