இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற சுதந்திரக் கிண்ணத்துக்கான ரி.20 இறுதிப் போட்டியில் இந்திய அணி சம்பியனாக தெரிவாகியது.
நேற்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு அழைத்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.
167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.
இப்போட்டியை பார்வையிடுவதற்காக வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய அணித் தலைவரிடம் சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணியின் டினேஷ் கார்த்திக்கும் தொடரின் ஆட்டநாயகனாக வொஷிங்டன் சுந்தரும் தெரிவு செய்யப்பட்டனர்.