Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தரம்உயர்கிறது! 

January 19, 2018
in News, Politics, World
0

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 169.02 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. புறநோயாளிகள் பிரிவுக்கு மட்டும் எட்டு தளங்களை ஒதுக்க, மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், நெருக்கடி இன்றி, நோயாளிகள் தரமான சிகிச்சை பெற, விரைவில் வழிவகை செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, ஆசியாவிலேயே மிகப்பெரியது. சிறந்த சேவைக்காக, தேசிய அளவில், பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.இங்கு, 3,500 படுக்கைகள், 800 டாக்டர்கள், 890 செவிலியர்கள், 750 உதவியாளர்களோடு, நாள் ஒன்றுக்கு, 15 ஆயிரம் புறநோயாளிகளுக்கும், 3,000 உள்நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இந்த மருத்துவமனை, சென்னை மருத்துவக் கல்லுாரி மேற்பார்வையில் செயல்படுகிறது. இங்கு, அனைத்து வகையான உடல் பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதில், சிறுநீரகம், இதயம், மூட்டு, காது, மூக்கு தொண்டை, புற்றுநோய், நாளமில்லா சுரப்பிகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பியல், இரைப்பை, குடல் நோய்கள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள், ரத்த நோய்கள், தோல் வியாதிகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.இந்த துறைகளுக்கு, தனித்தனி பிரிவுகள் உள்ளன.இதில், பிரமாண்டமாக உள்ள, ‘டவர் 1’ கட்டடத்தில், மருந்து, சிகிச்சைகள், பரிசோதனைகள் நடக்கின்றன. ‘டவர் 2’ கட்டடத்தில், அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.மேலும், வி.ஐ.பி.,க்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கென, தனிப்பிரிவு ஒன்று, அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது. இதில், தங்குவதற்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இந்த மருத்துவமனை வளாகத்திலேயே, ‘அம்மா’ முழு உடல் பரிசோதனை, 1,000, 2,000, 3,000 ரூபாய் என, மூன்று முறையில் பரிசோதனைக்கான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.தமிழகம் மட்டுமில்லாது, அண்டை மாநிலத்தவரும், ராஜிவ் காந்தி மருத்துவமனையை தேடி வந்து, தரமான சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை, மேலும் தரம் உயர்த்தும் வகையில், மூட்டு மற்றும் இணைப்பு தசை துறை, சிறுநீரகவியல் மற்றும் அறுவை சிகிச்சை துறை, கல்லீரல் துறை மற்றும் புறநோயாளிகள் பிரிவுகளுக்கு, 169.02 கோடி ரூபாய் மதிப்பில், புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன.இது குறித்து, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:அரசு மருத்துவமனைகளை, உலக தரத்துக்கு உயர்த்தும் நடவடிக்கையில், தமிழக அரசு செயல்படுகிறது.இதில், அதிக நோயாளிகள் வந்து செல்லும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையை, மேலும் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த மருத்துவமனையில், மூட்டு மற்றும் இணைப்பு தசை துறைக்கு, 19.65 கோடி ரூபாய் செலவில், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது.சிறுநீரகவியல் மற்றும் அறுவை சிகிச்சை துறைக்கு, 29.48 கோடி ரூபாயில், எட்டு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது.கல்லீரல் துறைக்கு, 16.70 கோடி ரூபாயில், ஐந்து அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது.அதே போல், புறநோயாளிகள் பிரிவுக்கு, 58.65 கோடி ரூபாய் செலவில், நான்கு அடுக்குமாடி கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டடத்தை, எட்டு அடுக்காக மாற்றி பயன்படுத்த, 44.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.மேலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், தற்போது உள்ள கட்டடங்களை, வண்ணம் பூசி பொலிவுபடுத்தவும் திட்டமிட்டு உள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் விரைவில் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

மாணவர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – த.மா.கா மாணவர் அணி

Next Post

பியூஷ் மனுஷ் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஈஷா!

Next Post
பியூஷ் மனுஷ் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஈஷா!

பியூஷ் மனுஷ் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஈஷா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

தமிழக முதல்வரிடம் யாழ் கடற்றொழிலாளர் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை!

July 22, 2026
ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

ஓய்வை அறிவித்தார் இலங்கையின் அதிவேக ஓட்ட வீரர் யுபுன் அபேகோன்!

July 22, 2026
மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures