மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவின் ரிட் மனு உள்ளிட்ட நால்வர் மீதான மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மத்திய வங்கி பிணை முறி விவகாரம் தொடர்பில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியானையை ரத்து செய்யுமாறுக் கோரி முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்றைய தினம் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 11 பேரை கைது செய்யுமாறு கோட்டை பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டிருந்தார்.
இதில் 04 பேர் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையலேயே முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தலைமறைவாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியானையை ரத்து செய்யுமாறுக் கோரி ரவி கருணாநாயக்காவின் சட்டத்தரணிகளால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.