சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வு கோரி பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள போதும்,சம்பள ஆணைக்குழுவால் குறித்த பரிந்துரைகள் செயற்படுத்தப்படாமையினால் பணிபகிஷ்கரிப்பை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் தொழிற்சங்க ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.
இதேவேளை, ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிபகிஷ்கிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் ரயில்வே சாரதிகளின் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடம்கொட அறிவித்துள்ளார்.