ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனுக்கள் எதிரிவரும் 6 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில், விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், இந்த மனுக்கள் விசாரனைக்கு வருகின்றது. பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை கொள்ளவனவு செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.
இதில், முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், இந்திய பங்குதாரராக அனில் அம்பானி நிறுவனத்தை இணைத்துக் கொண்டதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
இது தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர். ஆனால், வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரபேல் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை என மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில், ”ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை நீதிமன்றத்தில் அளித்துள்ளது. ரபேல் விமானத்திற்கு கொடுக்கப்பட்ட விலைக்கு மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்திடம் ஒப்புதல் பெற்றதாக நீதிமன்றத்தில் முத்திரையிட்ட கடித உறையில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது. எனவே, மீண்டும் இந்த விவகாரத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் நீதிபதி, தீர்ப்பு அளித்த அமர்வில் இருந்த நீதிபதிகள் மாறிவிட்டதால் இது சிக்கலானது. எனினும், மனுவை பட்டியலிடுவதற்காக வேறு ஏதாவது செய்கின்றோம் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு எதிரிவரும் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.