Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணில் விடயத்தில் | தமிழரசுக்குள் இருவேறு நிலைப்பாடு

May 14, 2022
in News, Sri Lanka News
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ள நிலையில் அவர் தலைமையில் அமையும் அரசாங்கத்துடன் எவ்விதமாக செயற்படுவது என்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்குள் இருவேறு நிலைமைகள் எழுந்துள்ளன.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் பீடம் வியாழக்கிழமை (12) மெய்நிகர் வழியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் புதிய பிரதமர் நியமினம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இச்சமயத்தில், பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்க மக்கள் ஆணையற்றவர். ஆவரை மக்கள் ஆணை மீளப்பெறப்பெற்றுக்கொண்ட ஒருவர் நியமித்துள்ளார் என்று சுமந்திரன் குறிப்பிட்ட கருத்தினை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இருப்பினும், பிரதமர் ரணில் தலைமையில் அமையும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படப்போவதில்லை.

அதேநேரம், மக்கள் நலன்சார்ந்து நல்ல விடயங்கள் முன்னெடுத்தால் அவற்றுக்கு தடையாக இருக்கப்போவதில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளர். இந்தக் கருத்துக்களை ஏனைய உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

எனினும், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புதிய பிரதமர் நியமனம் தொடர்பில் எமது கட்சி எவ்விதமான நிலைப்பாடுகளையும் எடுக்கவில்லை.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கூடி மீண்டும் பேசவுள்ளோம். அதன் பின்னர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தன் ஆகியோருடனும் கலந்துரையாடவுள்ளேன்.

கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு அல்லது ஒருங்கிணைப்புக்குழு கூடி இறுதி முடிவினை எடுக்கும் என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமந்திரன் நல்லாட்சி காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர். அதன் பின்னரும் அவருடன் நெருக்கமாகச் செயற்பட்டு வந்தவர்.

தற்போது அவருக்கு எதிரான நிலைப்பாட்டை ஏன் எடுத்துள்ளார் என்று தெரியவில்லையென குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் இருவர் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அவர்கள் தமது பெயர்களை வெளிப்படுத்த விரும்பவில்லை.

அதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதென்று ஏகோபித்த முடிவினை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு எடுத்துள்ளது. இதனை மாவை.சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

எனினும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

30 ஆண்டுகளாக ஆண் வேடமிட்டு வாழும் பெண்.. அடையாளத்தை மாற்றி முத்து மாஸ்டராக வாழ்ந்ததன் நெகிழ்ச்சி பின்னணி!

Next Post

தகுதிபெறுவதற்கான இலங்கையின் வாய்ப்பு நூலிழையில்

Next Post
தகுதிபெறுவதற்கான இலங்கையின் வாய்ப்பு நூலிழையில்

தகுதிபெறுவதற்கான இலங்கையின் வாய்ப்பு நூலிழையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures