இந்திய நடிகர்களிலேயே ரஜினி ஒருவர்தான் பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ரசிகர்களாலும் அறியப்பட்ட நபராக இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை. சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள டெர்பி போலீசார் தங்களது டுவிட்டரில் இட்டுள்ள பதிவு ஒன்றின் மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது.
சமீபத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய ஒருவருக்கு சுவாச சோதனை செய்த டெர்பி போலீசார், அதற்காக வெளியான பிரின்ட் அவுட் ரசீதை பார்த்து அதிர்ந்து போயினர்.. காரணம் அதில் காட்டப்பட்டிருந்த ஆல்கஹால் அளவு படி பார்த்தால் மருத்துவமனையில் ஒன்று சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தால் ஏற்படும் நிலை அல்லது கோமாவில் இருக்கும் நிலை ஆகியவற்றிற்கு சமமாக இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஒருவர் எப்படி கார் ஓட்டியிருக்க முடியும் என ஆச்சரியப்பட்டார்களாம். இந்த ஆச்சர்யத்தை வெளிப்படுத்தும் விதமாக 2.0 படத்தில் புரொபசர் வசீகரன் தான் கலந்து கொண்ட கூட்டத்தில் பேசும்போது, “இது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என சொல்வார்” அல்லவா.. அந்த வசனத்துடன் கூடிய ரஜினியின் புகைப்படத்தை தங்களது பதிவுடன் இணைத்து டுவிட்டரில் பதிவேற்றியுள்ளனர் டெர்பி போலீசார்