Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளாத ஐ .நா தீர்மானம்

March 23, 2019
in News, Politics, World
0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கருத்திற்கொள்ளவில்லையென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர் தெரிவித்துள்ளார்.

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பற்றி கருத்து தெரிவிக்கும்போதே மாணிக்கவாசகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடுகளின் நலன்சார்ந்தே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் போர்க்குற்றங்களுக்கும், இனப்படுகொலைக்கும் இலங்கையை பொறுப்புக்கூற வைக்க அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அல்லது அதற்கு சமமான அனைத்துலக தீர்ப்பாயங்களே அவசியமெனவும் மாணிக்கவாசகர் வலியுறுத்தியுள்ளார்.

அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் அமையுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஈழத்தழிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் மட்டுமின்றி அனைத்துலக அரங்கும் இருக்கின்றதெனவும் மாணிக்கவாசகர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஐ .நா வில் ரணிலின் நோக்கமே இறுதியில் நிறைவேறியுள்ளது

Next Post

வில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லை

Next Post

வில்பத்து வனப்பகுதியில் ஓர் அங்குலத்தையேனும் யாருக்கும் வழங்கப்போவதில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures