Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

November 26, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம்

யாழில் (Jaffna) தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் (M.K Shivajilingam) மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு பிரபாகரனுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக் கண்றுகள் வழங்கியும் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.

காவல்துறையினர் தெரிவிப்பு 

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம் | Ltte Leader S Birthday Celebrated In Jaffna Vvt

இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விவுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 70 மரங்கள் நடப்பட்டன

இந்தநிலையில் அந்தக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தலைவர் பிரபாகரனின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் பிறந்த தின நிகழ்வினை நடத்தினர்.

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்ததினம் | Ltte Leader S Birthday Celebrated In Jaffna Vvt

மேலும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினத்தை பிரதிபலிக்கும் வகையில் அவருடைய வீட்டு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள் நடப்பட்டன.

இதுமட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் 70 தென்னை மரக் கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Previous Post

திருகோணமலையில் சீரற்ற வானிலையால் 623 குடும்பங்கள் பாதிப்பு !

Next Post

மின்சாரக் கட்டண திருத்தம் – மின்சார சபை வெளியிட்ட அறிக்கை

Next Post
10 மணித்தியால மின்சார தடை! இலங்கை மக்களை தயாராகுமாறு அறிவிப்பு

மின்சாரக் கட்டண திருத்தம் - மின்சார சபை வெளியிட்ட அறிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures