வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த காணிகளில் மேலும் ஒரு தொகுதி காணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருட இறுதிக்குள் படையினர் வசமிருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமென ஐனாதிபதி தெரிவித்திருக்கின்றனர். அத்தோடு ஐனாதிபதியின் வடக்கு, கிழக்கு செயலணிக் கூட்டத்தின் போதும் காணி விடுவிப்பு தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டிருந்தன.
இதனடிப்படையில் வடக்கில் படையினர் வந்திருக்கும் காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு விடுவிக்கக் கூடிய காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென ஐனாதிபதி வழங்கிய உத்தரவிற்கமைய வடக்கில் காணிகள் விடுவிக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட இருக்கின்றன.
இதற்கமைய யாழ் மாவட்டத்தின் வலிகாம்ம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மயிலிட்டி வடக்கு, தையிட்டி தெற்கு, காங்கேசன்துறை மத்தி ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக சுமார் ஐம்பது ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளது.
இக் காணிகளை விடுவிக்கும் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவத் தளபதியினால் மாவட்ட அரச அதிபரிடம் இக் காணிகள் விடுவிக்கும் பத்திரமும் வழங்கி வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.