Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

  யாழ்ப்பாண பல்கலையில் மொழிபெயர்ப்பு தின கொண்டாட்டமும் வருடாந்த இதழ் வெளியீடும் – 2022

December 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
  யாழ்ப்பாண பல்கலையில் மொழிபெயர்ப்பு தின கொண்டாட்டமும் வருடாந்த இதழ் வெளியீடும் – 2022

2017 ஆம் ஆண்டில் ஐ.நா சபையானது உலக நாடுகளை இணைக்கவும் நாட்டின் அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கு உதவிபுரிபவர்களாகவும் விளங்கும் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டாடும் விதமாக செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதியினை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தியது.

இந்த வருடம் “தடைகளற்ற உலகம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினமானது உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் 2011ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையானது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.அன்றிலிருந்து தொடர்ந்து 10 வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் இத்தினமானது இந்த வருடமும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் டிசெம்பர் மாதம் 22ஆம் திகதி(2022-12-22) வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்.கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கே.சுதாகர் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆணையாளரான திரு.பிரசாத் ஹேரத் மற்றும் தேசிய மொழி சமத்துவ பிரதி ஆணையாளரான திரு.திருநாவுக்கரசு மாரிமுத்து அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் முயற்சிகளையும் வெகுவாக பாராட்டினர். இத்தினத்தில் காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரை மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்பினை அடிப்படையாகக் கொண்டு வினைத்திறனான கண்காட்சியும் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன்  பி.ப 2 மணி தொடக்கம் வருடாந்த இதழ் வெளியீடும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்களுக்கு பணப்பரிசில்களும் ஆவண மற்றும் கவிதை மொழிபெயர்ப்பின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.  மேலும் இந்நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையின் பட்டதாரிகள் மூவரால் மூன்று புத்தகங்களும் வெளியிடப்பட்டன. 

Previous Post

தோனியின் மகளுக்கு தனது கையெழுத்துடன் ஆர்ஜென்டீன அங்கி அனுப்பிய மெஸி

Next Post

12 மாதங்களில் 75,000 டெங்கு நோயாளர்கள் | 30, 31 தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனம்

Next Post
12 மாதங்களில் 75,000 டெங்கு நோயாளர்கள் | 30, 31 தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனம்

12 மாதங்களில் 75,000 டெங்கு நோயாளர்கள் | 30, 31 தேசிய டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures