கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வரு கை தந்தோருக்கான கொரோனா பி.சி .ஆர் பரிசோதனையானது யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெறுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் .
கொழும்பிலிருந்து அத்தியாவசிய பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு ஏற்றிவந்த லொறிகளின் சாரதி நடத்துனருக்கான pcr பரிசோதனையானது இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண பிராந்திய சுகாதாரசேவைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் 30 பேருக்கு குறித்த கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் மீண்டும் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்.தெரிவித்தார்.