Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு

May 29, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்வியை விட குறைவான எரிவாயு கொள்கலன்களே கிடைக்கப் பெறுவதனால் அவற்றை சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற ஏதுவான பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுப்பாவனைக்கு விநியோகிக்கும் முறை

கிராம அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகத்தர்களிடம், உரிய கிராம மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு

விநியோகத்தர்களும் மேற்படி விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும். விநியோகத்தர்களிடம், ஒரு வீட்டுக்கு ஒரு எரிவாயு கொள்கலன் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும்.

விநியோகத்தர்களுக்கு எரிவாயு கொள்கலன்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும்.

குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின் பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு விநியோகிக்கப்படும்.

விநியோகிக்கப்பட்ட விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது.

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு

எரிவாயு கொள்கலன் பெறவருபவர் உரிய கிராம அலுவலர் பிரிவு பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டையுடன் பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவர் ஒருவராக இருத்தல் கட்டாயமானது.

விநியோகத்தர்களுக்கு விநியோகிக்கும் முறை

தமக்கு கிடைக்கப்பெறும் எரிவாயு கொள்லகன்களின் எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும்.

கிடைக்கப்பெற்ற எரிவாயு கொள்கலன்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகத்தர்களுக்கு விநியோகிக்க வேண்டிய கொள்கலன்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் எஸ்விஎம் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு

அதன் அடிப்படையில் எஸ்விஎம் நிறுவனத்தினர் விநியோகத்தர்களுக்கான எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பர்.

ஏனைய தேவைகளுக்கு

கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரி சேவை நிறுவனங்கள் (சிறுவர் / முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல் விநியோகத்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும். 

Previous Post

அம்பாறையில் 76 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

Next Post

அன்றாட வாழ்க்கைக்கான தியானம்

Next Post
அன்றாட வாழ்க்கைக்கான தியானம்

அன்றாட வாழ்க்கைக்கான தியானம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures