கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கேரளாவில் பெருமழை வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பிலிருந்து மீண்டு வரும் கேரள மக்களுக்கு, உதவுவதற்காக மலையாள திரையுலகினர் அபுதாபியில் இன்று மாபெரும் நட்சத்திர கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றனர்.
இதில் கிடைக்கும் தொகையை அப்படியே வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மோகன்லால் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் மேடை பங்களிப்பும் கட்டாயம் இடம் பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மோகன்லால் மற்றும் இனியா இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார்கள்.. இதற்கான ரிகர்சலில் கூட மோகன்லால் கலந்து கொண்டார்.
கடந்த மே மாதம் கேரளாவில் அம்மா மழவில்லு என்கிற பெயரில் நடைபெற்ற நட்சத்திர கலைநிகழ்ச்சியில் கூட மோகன்லால், இனியா இருவரும் இணைந்து நடனம் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தகது.