தெலுங்கில் தனக்கென தனி இடத்தை பிடித்த மெஹ்ரின் பிர்சாடா, தமிழில் மீண்டும், பட்டாஸ் படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இதற்கு முன் இவர் நடித்த நெஞ்சிலே துணிவிருந்தால் படத்தில், இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. பட்டாஸ் படம் மூலம், மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வந்தது குறித்து அவருடன் பேசியதிலிருந்து:
பட்டாஸ் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?
தமிழில் எனக்கு நல்ல துவக்கம் கிடைத்துள்ளது. எனக்கு ஏற்ற பாத்திரம். கதையை கேட்டதுமே பிடித்து விட்டது. நீண்ட நாள் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த பட வாய்ப்பு கிடைத்தது கடவுள் கொடுத்த வரம்.என குறிப்பிட்டுள்ளார் .