Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை | தயாசிறி ஜயசேகர

February 28, 2022
in News, Sri Lanka News
0
மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து அரசியல் சூழ்ச்சியாம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்காக அவசியம் ஏற்படின் மத்திய குழுவின் ஏகமனதான தீர்மானத்துடன் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கும் பின்வாங்கப் போவதில்லை எனத் தெரிவித்த சு.க. பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர , உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறைபிடிக்க முயற்சித்தால் அதற்கு எதிராக அனைத்து சு.க. ஆதரவாளர்களையும் ஒன்று திரட்டி வீதிக்கு இறங்கவும் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொலன்னறுவையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து மாநாடுகளை நடத்துவதால் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளோம். எனினும் அந்த சவால்களைக் கண்டு நாம் அஞ்சப் போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபட்டோம்.

எனினும் தேர்தல் நிறைவடைந்த பின்னர் பாராளுமன்ற தேர்தலின் போது பொதுஜன பெரமுனவினர் எம்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

எவ்வாறிருப்பினும் பொலன்னறுவை மக்கள் ஒரு இலட்சத்து 11 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கி அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்தனர்.

எனினும் அவர் எந்த பதவிகளையும் ஏற்காமல் கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்.

2023 மார்ச் 23 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும்.

அவ்வாறில்லை எனில் செப்டெம்பர் முதல் தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் தேர்தல் ஆணைக்குழு வசமாகும்.

அதற்கு முன்னர் ஜூனில் அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்குமாயின் அதற்கும் சு.க. தயாராகவே இருக்கிறது.

எதிர்வரும் 5 ஆம் திகதி இது தொடர்பில் சு.க. தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருடனும் கலந்துரையாடவுள்ளோம். அதற்கமை உத்தேச உள்ளூராட்சி தேர்தலில் சு.க. பாரிய கூட்டணியுடன் வெற்றிபெறும் என்று உறுதியளிக்கின்றேன்.

2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருக்க மாட்டார். அவர்களது தொகுதிகளுக்கு மில்லியன் கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டது.

ஆனால் அதிகளவான வாக்குககளை வழங்கி மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். எனவே அபிருத்திகளால் மக்கள் பலத்தை பெற்றுவிட முடியும் என்று எண்ண வேண்டாம்.

அதனை விட அரசியல் பலம் மேலானதாகும். நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்கு மாற்று வழியுடன் பயணிக்க வேண்டும். அதற்கான வேலைத்திட்டத்தையே நாம் தற்போது முன்னெடுத்துள்ளோம்.

2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து கொண்டே அவருக்கான அதிகாரங்களை குறைத்துக் கொண்டார்.

எனினும் அதற்கு முன்னர் ஜனாதிபதிகளாக பதவி வகித்த சந்திரிகா குமாரதுங்கவோ அல்லது மஹிந்த ராஜபக்ஷவோ அதனை செய்யவில்லை.

நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதாகக் கூறியதை நிறைவேற்றிக் காட்டிய ஒரேயொரு தலைவர் மைத்திரிபால சிறிசேன மாத்திரமே.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அவர் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும் தனக்கு அது தொடர்பில் முன்கூட்டியே எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை என்பதை அவர் கத்தோலிக்க தேவாலயத்தில் வைத்துக் கூறினார்.

மனசாட்சியின் பிரகாரமே அவர் அதனைக் கூறினார். எனவே போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை சிறைபிடிக்க முயற்சித்தால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவாளர்கள் அனைவருடனும் வீதிக்கு இறங்கவும் தயாராகவே இருக்கின்றோம்.

எமது கட்சியின் தலைவருக்கு எதிரான சதியின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியும் , ஐக்கிய மக்கள் சக்தியுமே உள்ளன, எனவே எம்மை மீண்டும் அவர்களுடன் இணைக்க எவருக்கும் உரிமை கிடையாது என்றார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

“மன்மத லீலை” படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

Next Post

12 இந்திய மீனவர்கள் விடுதலை

Next Post
விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் விடுவிப்பு!

12 இந்திய மீனவர்கள் விடுதலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures