Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மே மாத முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

April 27, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மே மாத முதல் வாரத்தில் இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்

Japanese Foreign Minister Yoshimasa Hayashi speaks at a news conference in Warsaw, Poland April 4, 2022. Dawid Zuchowic/Agencja Wyborcza.pl via REUTERS ATTENTION EDITORS - THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. POLAND OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN POLAND.

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா எதிர்வரும் மே மாதம் 2 அல்லது 3ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

ஏற்கனவே ஜப்பான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி அவரது பதவிக்காலத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

அதன்போது கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், அனைத்து கடன்வழங்குனர் நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படைத்தன்மை வாய்ந்த  கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதில் மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் மேமாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகைதரவுள்ள அமைச்சர் யொகோ கமிகவா, மே மாதம் 4ஆம் திகதி இங்கிருந்து நேபாளத்துக்குப் பயணமாகவுள்ளார்.

அதன்படி ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொகோ கமிகவா, அவரது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை நடத்துவார் எனவும், இலங்கையின் பொருளாதார மீட்சி, கடன்மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

Previous Post

அஜித் குமாரின் பிறந்த நாளில் வெளியாகும் ‘பில்லா’

Next Post

பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 14 வயது சிறுமி

Next Post
பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 14 வயது சிறுமி

பிக்குனியாகப் போவதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டுச் சென்ற 14 வயது சிறுமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures