Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்

September 28, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு (CIABOC) ஆணைக்குழு நேற்று (26) இந்த தீர்மானத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் 

இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, விசாரணைகள் முடிவடைந்த பின்னர், சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் | Ciaboc File Indictments Against Rajitha Senaratne

இந்த வழக்கில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

அவர்கள் தற்போது நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு 2026 ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Previous Post

பலாலி விமான நிலையம் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்

Next Post

காங்கேசன்துறையை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது : அரச தரப்பின் அதிரடி அறிவிப்பு

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

காங்கேசன்துறையை சர்வதேச துறைமுகமாக மாற்ற முடியாது : அரச தரப்பின் அதிரடி அறிவிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures