முகத்தை மூடுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சட்டம் தொடர்பில் தெளிவான அறிவுறுத்தல்களுடன் கூடிய அறிவிப்பொன்று கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலை அதிபர்கள் உட்பட பாடசாலை சமூகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முகத்தை மூடுதல் தொடர்பில் போதிய விளக்கம் இன்மையினால் அண்மைக் காலமாக பாடசாலைகளில் எழுந்து வரும் சர்ச்சையைக் கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.
முழுமையாக முகத்ததை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட வதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் அதி விஷேட வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்படும் கட்டளைகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முகத்தை மூடுவது தொடர்பாக கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபம் என்பவற்றுக்கு ஏற்ப, கல்வி அமைச்சரின் ஆலோசனையின்படி, இந்த விஷேட அறிவித்தல் கல்வி அமைச்சின் செயலாளரினால் பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.