Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

December 14, 2016
in News
0
முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

முகத்தில் நான்கு புள்ளிகள்… சொல்லும் உண்மைகள்…!

ஜெயலலிதாவின் உயிர் டிசம்பர் 5, இரவு 11:30 மணிக்குப் பிரிந்தது என அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அன்று, இரவே இறுதிச்சடங்குகள் போயஸ் கார்டனில் நிறைவேற்றப்பட்டு காலையில் ராஜாஜி ஹாலில் மக்கள் பார்வைக்கு ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டது. அப்போதுதான் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு துளைகள் இருப்பது தெரிய வந்தது.

இந்தத் துளைகள் என்ன என்ற விவாதங்களும், சர்ச்சைகளும் கிளம்பின. அதுமட்டுமில்லாமல் செப்டம்பர் 22-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகும் சற்றும் மாறாமல் நாம் எப்போதும் பார்க்கும் ஜெயலலிதாவாகவே அஞ்சலிக்கு வைக்கப்பட்டதும் மக்களிடையே சந்தேகத்தை ஏற்ப‌டுத்தியது.

‘முகத்தில் இருந்த நான்கு துளைகள், அதே முகம்’ எனப் பல விஷயங்களுக்கு விடை தேடினால் கிடைக்கும் பதில்களில் ஒன்று எம்பாமிங். இது உடலைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறைகளில் ஒன்று.

இதில் உடலில் இருந்து எம்பாமிங் செய்ய உதவும் கருவி மூலம் குறைந்த அழுத்தத்தில் ரத்தம் நீக்கப்பட்டு உடலில் அதே சிறுதுளை மூலமாக பார்மால்டிஹைடு கலந்த திரவம் நிரப்பப்படும்.

இது உடலை உயர் குளிர்நிலையில் வைத்துப் பாதுகாக்கப் பயன்படும். சோவியத் அதிபர் லெனின் உள்ளிட்ட‌ உலகின் முக்கியமான தலைவர்கள் இற‌ந்தபோது இதே போன்ற எம்பாமிங் முறையில்தான் அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டன.

இந்த எம்பாமிங் குறித்து மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘உடலைப் பதப்படுத்தி, பாதுகாக்கத்தான் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

இந்த முறையைப் பயன்படுத்தி பதப்படுத்தப்படும் ஒருவரது உடலைக் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை பாதுகாக்க முடியும்.

ஆனால், உயர் குளிர்நிலையில் உடலைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்படி வைக்க முடிந்தால் ஒருவரது உடலை தாராளமாக மூன்று மாத காலம் வரை எந்த மாற்றமும் இன்று அப்படியே பாதுகாக்க முடியும்.

இதே போலத்தான் ஜெயலலிதாவுக்கும் செய்யப்பட்டது என்றால் மாலை 5 மணிக்கு `முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் வதந்திகளை நம்பாதீர்கள்’ என்ற அறிக்கையை அப்போலோ வெளியிட்டது.

`இரவு 11:30 மணிக்கு இறந்தார்’ என்ற அறிவிப்பு வருகிறது. இரவு 2 மணிக்கெல்லாம் முதல்வர் உடல் மருத்துவமனையில் இருந்து வெளியேறுகிறது.

இதற்கு இடைப்பட்ட நேரத்தில் எம்பாமிங் செய்யப் பட்டதா? முதல்வரது உடல் காலையில் பார்வைக்கு வைக்கப் பட்டது போல மாலையில் இல்லை.

உடலில் சில மாற்றங்களை மக்களால் உணர முடிந்தது. இதன் பின்னால் என்ன நடந்திருக்கும்? எம்பாமிங் செய்யப்பட்ட உடலை நீணட நேரம் உயர் குளிர்நிலையின்றி வைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால்தான் முதல்வர் உடல் ஒரே நாளில் அடக்கம் செய்யப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது’’ என்றார்.

இதையெல்லாம் தாண்டி எம்பாமிங் செய்யப்பட்ட ஒருவரது உடலை மூன்று மாதங்கள் வரை பாதுகாக்கலாம் என்ற தகவலும், முகத்தில் இருக்கும் துளைகளும் முதல்வர் டிசம்பர் 5 அன்று தான் இறந்தாரா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தக் கேள்விகளுக்கு பதில் அப்போலோவுக்கும், மன்னார்குடி குடும்பத்தாருக்கும் மட்டுமே தெரியும்!

Tags: Featured
Previous Post

விடுதலைப் புலிகளை அழிக்க எத்தனை கோடி? எத்தனை போராளிகள் கொல்லப்பட்டனர்?

Next Post

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு: விரைவில் வெளியாகும் ரகசியம்?

Next Post
ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு: விரைவில் வெளியாகும் ரகசியம்?

ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் திருட்டு: விரைவில் வெளியாகும் ரகசியம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை

June 2, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சரவை பேச்சாளர்

June 2, 2026

Recent News

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை

June 2, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சரவை பேச்சாளர்

June 2, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures